இதுவா பொருளாதாரம் ?




உணவு உடை உறைவிடம் இவையே
---- மனிதனுக்கு உண்மையான தேவைகள்.
பணம் பெருக்கும் பேராசையால் முதலாளிகள் பலர்கூடித்
----தேவையற்ற பொருட்கள்பல உற்பத்தி செய்வார்.
மனமயக்கத்திலேயே எப்போதும் ஆழ்ந்திருக்கும் மக்கள்
----உழைத்தீட்டும் பணத்தை கொட்டுகின்றார் இதிலே.
குணம்மாறி மக்கள் விழிக்கும்வரை சமூகத்தில்
----கடன் நோய்கள் வறுமை குறையா.
வீணாக இவ்வகையில் மனித ஆற்றல் விரயமாகாமல்
----தடுக்க சிந்தனையை செலுத்துவீர் அறிஞர்களே !


- லிங்கேஸ்வரன்.

Comments

  1. மனமயக்கத்திலேயே எப்போதும் ஆழ்ந்திருக்கும் மக்கள்
    ----உழைத்தீட்டும் பணத்தை கொட்டுகின்றார் இதிலே.


    ....சமூக அக்கறையுடன், சிந்திக்க வைக்கும் ஒரு கவிதை. பாராட்டுக்கள்!

    ReplyDelete

Post a Comment