நோய்களை குணமாக்குவது எப்படி?





ஆதிவாசிகளாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுக்கு நோய் என்பதே இருந்திருக்காது. நாகரீகம் வளர வளர, மக்கள் ஒரு சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் வரையறைகள் (Social norms) இவைகளோடு கூடிய சமூகமாக வாழத்துவங்கிய போதுதான் நோய்கள் துளிர்விடத் துவங்கியிருக்கும்.  நாகரீக வாழ்விற்கு ( modern civilization ) மனிதன் கொடுக்கும் விலைதான் இன்றைய மனநோய்கள் என்கிறார் உளவியல் மேதை Sigmund Freud . உடல் நோய்களும் அவ்வாறே என சொல்லத் தேவையில்லை. அறிவியல் வளர வளர நோய்களும் பெருகுகின்றன, மருந்துகளும் பெருகுகின்றன, மருத்துவக் கருவிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன.மருத்துவத் துறையில், சரியான திசையில்தான் செல்கிறோமா?  உதாரணமாக, Dexamethasone என்ற மருந்து நவீன மருத்துவத்தில் , தோல் அலர்ஜி, ஒவ்வாமை மற்றும் பல வியாதிகளை கட்டுப்படுத்த தரப்படுகிறது. இம்மருந்து என்ன செய்கிறது என்றால்-  மனித நோயெதிர்ப்பு சக்தியின் (Immune system ) செயல்பாட்டை , உடம்பின் இயல்பான (Body's natural defensive response) எதிர்வினையாற்றும் திறனை மட்டுப்படுத்துகிறது. 



என் மனதில் வசிக்கும் ஒரு நாட்டு மருத்துவர் என்ன கூறுகிறார் எனில், நம் வீட்டில் இருக்கும் மளிகை சரக்குகளை பயன்படுத்தியே பெரும்பாலான நோய்களை தீர்த்து விடலாம் என்கிறார். அச்சரக்குகள்:-


 " மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், இலவங்கம், மல்லி, பெருங்காயம், கடுகு, ஏலக்காய், விளக்கெண்ணெய் , கறிவேப்பிலை, கொத்தமல்லி, எலுமிச்சை, தேன் , இஞ்சி , சுக்கு, இந்துப்பு , கிராம்பு மற்றும் சில சரக்குகள்  "


பிறகென்ன?  என்றால் அவர், நோய்களை குணமாக்க இது மட்டும் போதாது - தான் மேலும் சில முக்கிய அம்சங்களை நோய் வாய்பட்டவரிடம் இருந்து எதிர்பார்ப்பதாக கூறுகிறார். அவைகள்:- 



 " நோயாளியின் ஒத்துழைப்பு, பொறுமை, நம்பிக்கை , மன தைரியம் "


Writing
P.Lingeswaran
Professor / MBA

Comments