நீண்ட நாள் வாழ்ந்திடுவேன்! நல்லறிவு
--- நற்குணங்கள் பல பெற்று தாமதமே
ஆண்டுபல கழிந்தாலும் சான்றோன் எனும்பெயரை
--- பெற்றோருக்கு ஈட்டித் தருவேன்! கருத்துக்கும்
கண்ணுக்கும் இனிதான பெண்ணை மணந்து
--- என்ன தவம் செய்தேனோ என அவள்
எண்ணும்படி நடந்திடுவேன்! இருவரின் தெய்வீக
--- அன்பில் தழைக்கும் மழலைகளை உலகுக்கே
தொண்டு செய்ய வளர்த்திடுவேன்! நாளுக்கு
--- நாள் மனக் களங்கங்கள் நீக்கி உள்நோக்கி
கண்ட இறைநிலை உணர்ந்து நானே அதுவாகி
--- இல்லறஞானி எனும் நல்லபெரும் பேறடைவேன்!
ப.லிங்கேஸ்வரன்.
01/02/2014.
(Poem Inspired by Vethathiri Maharishi's Life)
Comments
Post a Comment