மனத்தூய்மை ஒன்றே பிறவிப் பெருங்கடல்
---- நீந்த சரியான வழி - தொடரும்
வினைத்தூய்மை கொண்டு வரும் வாழ்வில்
---- பேரமைதி நிறைவு வேண்டுவன எல்லாம்.
கனலென எரியும் காமஉணர்வு மனத்தில்
---- அழுத்தும் ஆசைகள் கோபம் கவலைஇவை
அனைத்தையும் ஒவ்வொன்றாய் களைந்து வர
---- தூயமனம் மெய்ப்பொருளாகும் வரம் கிட்டும்.
- ப.லிங்கேஸ்வரன்.
__________________________
Inspired by Vethathiri Maharishi.
__________________________
Comments
Post a Comment