ஜெர்ரி கோல்டுஸ்மித் & இசைஞானி இளையராஜா - ஓர் ஒப்பீடு...





என் அப்பா திடீரென இறந்தது என் அன்றாட வாழ்க்கையையே முடக்கிவிட்டது. அப்போதுதான் தாய் தந்தையருக்கும் பிள்ளைகளுக்கும்  உயிர்த்தொடர்பு இருப்பது துல்லியமாக புரிந்தது.  மனக்கலக்கம், இதய படபடப்பு போன்றவை பலநாட்கள் எனக்கு நீடித்தன. கனவில் என் அப்பாவை காப்பாற்றுவது போல காட்சிகள் தோன்றியது துயரத்தை மேலும் அதிகப்படுத்தியது.  


செத்தபிறகு ஒருவரது ஆன்மாவானது இருவழிகளில் பயணிக்கிறது.  ஒன்று, ஆன்மா உடலைவிட்டு வான்வெளியில் மிதக்கிறது. இது ஆன்மாவின் சாந்தியடையாத நிலை. இரண்டு, உடல்விட்ட ஆன்மா அவரது மகன் அல்லது மகளின் உடலோடு (ஆன்மாவோடு) இணைந்து கொள்வது.  இந்த நிலையில் உடல்விட்ட ஆன்மா பிள்ளைகளின் ஆன்மாவோடு அமைதியாக ஐக்கியமாக சில மாதங்கள் பிடிக்கும். அதுவரையில்  மகனோ மகளோ சில உடல்-மன உபாதைகளை பொறுத்துக் கொள்வதை தவிர வேறுவழியில்லை.  இதற்காகத்தான் மந்திரம் ஓதி சிலபல சடங்குகளை செய்கிறார்கள்.

 
கவலையிலிருந்து மீள்வதற்கு இண்டர்நெட்டிலேயே மூழ்கிக் கிடந்தேன்.  இளையராஜாவின் பாடல்கள், சில கமல் படங்கள் மனதை ஆறுதல்படுத்தின.  நெட்டிலிருந்து மூழ்கி எழுந்தபோது எனக்கு இரண்டு முத்துக்கள் கிடைத்தன. ஒன்று ரம்யா. இன்னொன்று ஜெர்ரி கோல்டுஸ்மித் ( Jerry Goldsmith). ரம்யாவிற்கு வழக்கம்போல் கொடுத்து வைக்கவில்லை.


ஜெர்ரி கோல்டுஸ்மித் ஒரு ஹாலிவுட் இசையமைப்பாளர்.  ஆதாரமாக யூத இனத்தை சேர்ந்தவர்.  Rambo, The mummy, Omen, The planet of the apes (1968) போன்ற உலக பிரபலமான படங்களுக்கு இசையமைத்தவர். இவை சில படங்களே.  கணக்கற்ற படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.  அவரது இசையை முதன்முறையாக அனுபவித்து கேட்கும் அறிய வாய்ப்பு தற்செயலாக கிடைத்தது. அந்த சமயத்தில்தான் ஓர்  ஆச்சரியான உண்மை புரிந்தது. ஜெர்ரி கோல்டுச்மித்தின் இசையும், இசைஞானி இளையராஜாவின் இசையும் பல ஒற்றுமைகளை கொண்டிருந்தது. 


ஜெர்ரியின் சாயல் தெளிவாக இளையராஜாவிடம் தெரிகிறது.  இருவரும் ஒரே முறையிலான இசை பாணியை ( School of music )  பின்பற்றுகின்றனர்.  ஜெர்ரிக்கும், ராஜாவுக்கும் கீழ்க்கண்ட அம்சங்கள் பொதுவாக புலப்படுகின்றன. அவை:

1.   ஒரு திரைப்படத்தின் மையக்கரு மற்றும் சாரத்தை நன்றாக உள்வாங்கிக்கொண்டு அதை அப்படியே இசையில் பிரதிபலிப்பது.
2.   வெகு நேர்த்தியாகவும், லாவகமாகவும் இசைக்கருவிகளை மாற்றி மாற்றி உபயோகிப்பது.
3.   திகைக்க  வைக்கும் பிரம்மாண்டமான இசை.


இருவருக்கும் ஒரே ஒரு முக்கியமான வேறுபாடு மட்டும் உண்டு. அதைமட்டும் குறிப்பிடிகிறேன். இளையராஜா தனது திரைப்படங்களில் சில காட்சிகளில் மௌனத்தையே  இசையாக்கிவிடுவார். அதாவது எந்த இசையும் இல்லாமல் அப்படியே விட்டுவிடுவார்.  நம் வாழ்க்கையில் கூட சில தருணங்களில் ஒருவரின் மௌனம் நம் மனதை அதிர வைக்கிறது அல்லவா?  Silence speaks more than words என்பார்கள்.  மற்றபடி  கோல்டுஸ்மித், இளையராஜா இருவரும் உலக இசைமேதைகள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


ஜெர்ரி ஸ்மித்தின்  சில இசைக்குறிப்புகள் திரைப்படங்களிருந்து:

http://www.youtube.com/watch?v=6cJ-rvGpW84
http://www.youtube.com/watch?v=Kahg3C5vI0o
http://www.youtube.com/watch?v=4902R56BXCY

இளையராஜாவின் சில இசைக்குறிப்புகள் திரைப்படங்களிருந்து:

http://www.youtube.com/watch?v=SsrvOpbob-g
http://www.youtube.com/watch?v=ZcMjdeEsvng
http://www.youtube.com/watch?v=fjmvIb_PaVo
http://www.youtube.com/watch?v=se3q5PhIh00
http://www.youtube.com/watch?v=P_sYBPtW4NA

குறிப்பு:  அனைத்து இசைக்குறிப்புகளையும்  முழுவதுமாக இரண்டு மூன்று தடவை கேட்கவும்.  ஹெட் போனில் கேட்பது உத்தமம்.  இளையராஜவின் இதயம் டைட்டில் இசையை கேட்கும்போது எனக்கு கண்ணீர்  வருகிறது.

Comments

  1. அருமையான ஒப்பீடு லிங்கேஸ்.தந்தை குறித்த உங்களின் உணர்வு மனது கனக்கச் செய்கிறது.காலமே இதற்கு மருந்து.மகரிஷி அவர்களின் ஆன்மசிந்தனையை
    அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் தம்பி.

    ReplyDelete
  2. ஆறுதலுக்கும், பாராட்டுக்கும் நன்றி அக்கா...

    ReplyDelete

Post a Comment