கவிதை - சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8
இறைவனின்
பேரற்புதம் !
இறைவனே
மலரினும் மென்மையாக
எடுத்த புனித வடிவம்
பெண்மை...!
நிலவாக, மலராக
கவிஞர்கள் உருவகித்தாலும்
உள்ளத்தில்
துயரங்களையும், துக்கங்களையும்
தாங்கிக் கொள்ளும்
இரும்பின் வலிமை !
பகுத்து பகுத்து
அறியும்
அறிவியல் உலகில்
எதையும் உள்ளுணர்வால்
உணரும் திறமை !
தாயாய், தாரமாய், மகளாய்
உலக அனைத்து உயிர்களை
அரவணைத்துக் கொள்ளும்
பேரன்பு...!
உயிரின்றி உடலில்லை...
பெண்களின்றி உலகமே இல்லை...!
ஆக்கம்: சௌமியா & லிங்கேஸ்வரன்.
Comments
Post a Comment