சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8...

கவிதை - சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8



இறைவனின் 
பேரற்புதம் !
இறைவனே 
மலரினும் மென்மையாக 
எடுத்த புனித வடிவம் 
பெண்மை...!
நிலவாக, மலராக 
கவிஞர்கள் உருவகித்தாலும் 
உள்ளத்தில் 
துயரங்களையும், துக்கங்களையும் 
தாங்கிக் கொள்ளும் 
இரும்பின் வலிமை !
பகுத்து பகுத்து 
அறியும் 
அறிவியல் உலகில்  
எதையும் உள்ளுணர்வால் 
உணரும் திறமை !
தாயாய், தாரமாய், மகளாய் 
உலக அனைத்து உயிர்களை 
அரவணைத்துக் கொள்ளும் 
பேரன்பு...!
உயிரின்றி உடலில்லை...
பெண்களின்றி உலகமே இல்லை...!

ஆக்கம்: சௌமியா & லிங்கேஸ்வரன்.

Comments