காதல் கவிதைகள்...






எனது
கிறுக்கல்களும்
கவிதைகளாக
மாறின.....
அவள் அதை
படித்த பொழுது... !


____________________________________________________





தடுமாறி
விழுந்தேன்
அவளுடன்
காதலில்....!


_____________________________________________________





அவள்
பேசிக்கொண்டே
இருக்கிறாள்....
நான் அதை
நேசித்துக் கொண்டே
இருக்கிறேன்...!


______________________________________________________





முத்து முத்தாக
பனித்துளிகள்
ரோஜா பூவில்...
அவள் முகத்தில்
பருக்கள் போல.....!


________________________________________________________





விட்டு விட்டு
விலக நினைத்தாலும்
தொட்டு தொட்டு
விளையாடுகிறது
அவள் நினைவு...!


_________________________________________________________





அவளின்
மௌனம்
என் மனதில்
பெரும் சப்தமாய்
ஒலிக்கிறது.....!


__________________________________________________________





கவிதை: லிங்கேஸ்வரன்.



Comments