ஒருவருக்கொருவர் குழந்தையாகி...



தலைமுடி கோதி
மடியில் முகம் புதைத்து 
கிடைக்கும் ஒரு நொடியில் 
இதழ் மேல் இதழ் பதித்து 
சாதி உடைத்து 
போராடி திருமணம் செய்துகொண்டு 
நிஜமாக, பொய்யாக கோபித்துக் கொண்டு 
மழை பெய்யும் மாலை வேளையில் 
பின்னால் இருந்து கட்டியணைத்து 
கோபங்கள் கரைந்து 
உடம்புக்கு நோவு வந்த வேளையில் 
தோளில் சாய்த்துக்கொண்டு 
ஒழுகும் மூக்கை சிந்தி 
மருந்து மாத்திரை ஊட்டி விட்டு 
வருடங்கள் பலகடந்து 
முதுமை வயதில் 
ஒருவருக்கொருவர் குழந்தையாகி 
முற்றுப் பெரும் 
வாழ்வே காதலுக்கான 
என் அர்த்தம்.....!


கவிதை: லிங்கேஸ்வரன்.

Comments