பூ வனம்...!


தாலி முடிச்சு ஒண்ணு
அவ கழுத்துல போட
நெனச்சேன்...
அவளோ என் மனசுல
முடிச்சு ஒண்ணு
போட்டு விட்டா...
மோதிரம் ஒண்ணு
அவ கையில போட
நெனச்சேன்...
அவளோ உள்ளத்துல
மோதிப்பாருன்னு
சொன்னா....
அவ உள்ளக் கதவுதான்
இரும்பு...
ஆனா உள்ளுக்குள்ள
எல்லாமே
பூ வனம்.....!


லிங்கேஸ்வரன்

Comments