

மனிதகுலம் தன் அறிவின் முழுமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார் சுவாமி விவேகானந்தர். மனித வாழ்க்கையே அறிவின் முழுமையை நோக்கிய பயணம்தான் என்கிறார் மாமுனிவர் வேதாத்திரி மகரிஷி. விலங்குகள் ஐம்புலன்களின் வழியில் வாழ்பவை. தேவைக்காக (Biological needs) மட்டுமே ஒரு பொருளையோ, துணையையோ நாடும். ஐம்புலன்களின் இயக்கம், அனுபவங்கள் மூலமாகவே விலங்குகள் வாழ்கையை நடத்துவதால் அவை என்றுமே இயற்கையை மீறுவதில்லை; இயற்கையை ஒட்டியே அவற்றின் வாழ்வு அமைகிறது. இக்காரணத்தினால் விலங்கின வாழ்வில் ஒழுக்கம், பாவம், புண்ணியம் என்ற பேச்சுக்கே இடமில்லை, அதனால் ஒழுக்கத்தை மீறுவது - பாவம் புரிவது என்ற நேர்வும் அவற்றின் வாழ்வின் எழவில்லை.
ஆனால் மனிதனின் வாழ்வு அப்படிப்பட்டதல்ல. பரிணாம வளர்ச்சியில் மிருகங்களிருந்து மனிதன் தோன்றினான். அப்போதே மனிதனிடம் ஆறாவது அறிவு செயல்பட தொடங்கிவிட்டது. ஆறாவது அறிவு என்பது புலன்களை கடந்து சிந்திப்பதாகும். எந்த ஒரு பொருளையும் உருமாற்றி, அழகுபடுத்தியே மனிதன் பயன்படுத்த தொடங்கினான். எந்த செயலுக்கும் காரணத்தை அறிய முற்பட்டான். மனிதனின் இடைவிடாத முயற்சியில் பலபல கண்டுபிடிப்புகள் உருவாகின. எந்த ஒரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூலகாரணமாகவும் உட்பொருளாகவும் ஒரு பொருள்/ஆற்றல் இருக்கவேண்டுமென யூகித்துக் கொண்டான். அதனை அறிந்துவிட வேண்டுமென இடைவிடாது காலங்காலமாக முயன்றார்கள். அவ்வப்போது சோர்வும்,தடங்கலும் ஏற்பட்டாலும் தங்கள் முயற்சியில் மனம்தளரவில்லை. காரணங்களுக்கெல்லாம் காரணமாகவும், பொருட்களுக்கு எல்லாம் பொருளாகவும் இருப்பதால் அப்பொருளுக்கு மெய்ப்பொருள் ( Almighty or Providence ) என முன்னோர்கள் பெயரிட்டார்கள். மெய்ப்பொருளை குறித்த தேடலானது மனித மனத்தில் தலைமுறை தலைமுறையாக எல்லோருக்கும் தொடர்ந்து வருகிறது. இதுவே மெய்ஞ்ஞானம் எனப்படும். ஆங்கிலத்தில் Philosophy எனவும் , தமிழில் தத்துவம் எனவும் அழைக்கபடுகிறது.
ஒருபுறம் மெய்ஞான தேடல் தொடர்ந்து கொண்டிருந்தாலும் , மனிதனின் கலாச்சாரமும் ( Cultural development ) ஒருபுறம் வளர்ச்சி பெற்றுக்கொண்டே இருந்தது. மெய்ப்பொருளை பற்றிய ஆராய்ச்சியே - நாகரீக வளர்ச்சியில் உருமாற்றம் பெற்று , மருவி, சிதைந்து, பகுக்கப்பட்டு பல்வேறு பட்டப்படிப்புகளாக்வும், பட்ட மேற்படிப்புகளாகவும் நம்மிடையே தற்காலத்தில் உலவிவருகின்றன. தத்துவமே எல்லாவித படிப்புகளுக்கும் தாயாகும். Philosophy is the mother of all academic studies. அறிவின் முழுமையை நோக்கிய பயணம் என்ற கருத்தையே தத்துவம் என்ற சொல் குறிக்கிறது. இதனால்தான், பட்ட மேற்படிப்புக்கு பிறகான எந்த ஆராய்ச்சி படிப்பும் M.Phil (Master of philosophy) என்றும், Ph.D (Doctorate in philosophy) என்றே கல்லூரிகளால் வழங்கப்படுகின்றன.
இன்றைய உலகில் வழங்கிவரும் பல்வேறு படிப்புகளில் MBA என்ற படிப்பானது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏனெனில் இதுவே ஏறக்குறைய ஒரு முழுமையான படிப்பை நெருங்கி வருகிறது ( A Complete academic study ) . MBA -ல் உள்ள சிற்சில குறைகளை நீக்கிவிட்டு, சேர்க்க வேண்டியதை சேர்த்துவிட்டால் முழுமை பெற்றுவிடும். மற்ற படிப்புகளை நோக்கினால் அவை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும். உதராணமாக, B.Sc கணிதம், இயற்பியல், வேதியியல், உளவியல் மற்றும் M.Sc, B.E, MBBS போன்றவையாகும். இன்னும் ஒருபடி மேலேபோய், அவற்றையும் பகுத்து பகுத்து பல்வேறு பட்டப்படிப்புகளாக கல்லூரிகளில் வழங்குகிறார்கள். உதாரணமாக, M.Sc(Nuclear physics) , B.E (Petrol Engineering), B.Sc(Interior designing), M.Ch (Neurology) etc. இவையெல்லாம் நுட்பமாக படிக்கவேண்டியவை. குறுகிய அளவிலேயே இருப்பதால் இவற்றை படிப்பதால் விசாலமான அறிவு ஒன்றும் ஏற்பட்டுவிடாது. சம்பாதிக்க பயன்படும்.
MBA என்ற பட்டமானது அப்படி அமையாமல், ஒரு உலகளாவிய பார்வையும் ( Global view ), விசாலமான அறிவையும் கொண்டு விளங்குகிறது. சிலர் MBA -ல் எல்லா படங்களும் பொதுவாகவே உள்ளது; படிக்க பெரிதாக ஒன்றுமில்லை. குப்பை என்றுகூட சொல்வார்கள். அது அவரவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்தது. ஒரு விஷயத்திற்கு நாம் மனதால் கொடுக்கும் மதிப்பே அதன் மதிப்பாகும். மனதால் அன்றி எதைக்கொண்டு ஒரு பொருளை மதிப்பிடுகிறோம். MBA வானது ஒரு எல்லைக்குள் தன்னைக்குறுக்கி கொள்ளாமல் பலதுறை அறிவை தன்னுள் அடக்கிக்கொண்டு விளங்குகிறது. MBA-ல் கணிதம் (Maths), கணிதவியல் (Accountancy), பொருளாதாரம் (Economics), உளவியல் (Psychology), வணிக சட்டம் (Business law), உற்பத்தி நிர்வாகம் (Production management), மனிதவள மேம்பாடு (Human resource management), தொழிலாளர்நல சட்டம் (.Labor welfare and act), நிதி மேலாண்மை (Financial management), சர்வதேச பொருளாதார, சமூக சூழல் (International political and economic environment) , ஆராய்ச்சி செயல்முறைகள் (Research .methods) - இத்தனை பாடங்களையும் ஒருங்கே கற்றுக்கொடுக்கிறார்கள்.
முயற்சி செய்தால் ஒரு .MBA மாணவர் பலதிறமைகளை பெற்று விளங்கலாம். ஆங்கிலத்தில் இதனை .Versatile என்று கூறுவார்கள். புரியும்படி கூறினால், சகலகலா வல்லவர் என்று கூறலாம். ஆர்வத்துடன் படித்தால் MBA படிப்பானது மிகுந்த மகிழ்ச்சியை ஒருவருக்கு தரக்கூடியதாகும். A MBA student is supposed to know something about everything. இதற்கு ஒரு நல்ல உதாரணமாக இயக்குனர் மணிரத்னத்தை கூறலாம். மணிரத்னம் புனேவில் MBA படித்தவர்.
இப்போதுள்ள .MBA படிப்பில் விடுபட்டவை உயிரியல் (Biology) மற்றும் வணிக தார்மீக நெறிகள் (.Business ethics) போன்றவை மட்டும்தாம். மருத்துவத்தில் (MBBS) முதல் வருடத்தில் .Anatomy, Bio- chemistry, Physiology போன்ற பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இவை மூன்றையும் மிகவும் சுருக்கி, எளிமையாக்கி .MBA -ல் ஒரே பேப்பராக சேர்த்து விடலாம். கூடவே அன்றாட வாழ்வில் பிரயோஜனப்படும் உளவியலையும் (the psychology which is applicable and useful to practical life). அந்த பேப்பரில் சேர்த்து விட்டால் போதும். எந்த ஒரு படிப்பனாலும் படிப்பவருக்கும் பயன்பட வேண்டும், சமூகத்திற்கும் பயன்பட வேண்டும் என்பதே அதன் உள்நோக்கமாகும். ஒரு மனிதனானவன் தனக்கும், சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை ஐயமற உணர்ந்து அதற்கேற்ப பொறுப்போடு, சமுதாயநல நோக்கோடு (Social welfare) தனது செயல்களை கட்டுப்படுத்தி நடந்து கொள்வதுதான் .Ethics எனப்படும். தூய தமிழில் அறம் எனப்படும். Business Ethics எனப்படுவது தனிமனிதனுக்கு மட்டுமல்ல, வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். இருந்தபோதிலும் .Ethics, Responsibility போன்றவற்றையெல்லாம் யார் மனதிலும் நாமாக திணிக்க முடியாது; தானாகவே வர வேண்டும். பீட்டர் டிரக்கர் உள்ளிட்ட பல மேனேஜ்மென்ட் மாமேதைகள் தொடர்ந்து .Business ethics -ஐ வலியுறுத்தி வந்தார்கள். தற்போது MBA படிப்பில் Business ethics என்பது Corporate Social Responsibility என்ற பெயரில் ஒரு முக்கிய இடமும், கவனமும் பெற்று வருகிறது. நிறுவனங்களும் CSR செயல்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைகழகம் (IGNOU) கடந்த ஆண்டு MBA (Social Welfare) என்ற படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும்.
IIM (Indian Institute of Management) என்ற கல்வி நிறுவனம் இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்பெற்றது. IIM-ல் MBA படித்தவர்கள் ஒரு மாதத்திற்கே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இந்தியாவின் முக்கிய நகரங்களில் .IIM-கள் அமைந்துள்ளன. IIM, Bangalore ஒரே ஒரு நான் தடவை சென்றுள்ளேன். IIM-ல் MBA சேர்வதற்கு CAT (Common Aptitude Test) என்ற அகில இந்திய பரீட்சை எழுத வேண்டும். அதை தவிர MAT (Management Aptitude Test) என ஒரு டெஸ்ட் உள்ளது. மேலும், IIT (Indian Institute of Technology), பொறியியல் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள் என எல்லாவற்றிலும் MBA படிப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு கல்லூரிகளில் MBA சேர .TANCET எழுத வேண்டும். இதை தவிர, Consortium Test எழுதி துட்டு கொடுத்து கூட சேரலாம். IIM -ல் படித்தால் மட்டும்தான் உயர்வு, மற்றதெல்லாம் தாழ்வு என்றில்லை. எல்லா MBA களும் ஒன்றுதான். நாம்தான் திறமைகளை முயன்று வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு .MBA மாணவர் - நல்ல தகவல் தொடர்பு திறன் (Communication skill), ஆங்கில அறிவு (English proficiency), தலைமைப் பண்பு (Leadership), பிறருடன் சுமூகமாக உறவாடுதல் (Interpersonal skill), ஒருங்கிணைக்கும் திறன் (Co-ordination), குழுவாக செயல்படுதல் (Team spirit) போன்ற திறன்களை பெற்றிருக்க வேண்டுமென எதிர்பார்க்கபடுகிறார்.
எனக்கு தெரிந்தவரை நடிகைகளில் பத்மப்ரியா எம்.பி.ஏ. படித்தவர். யார் கண்டது, நீங்களும் எம்.பி.ஏ. படிக்கும்போது பத்மப்ரியாவை போல ஒரு அழகான தாரகையை சந்திக்க நேரிடலாம். எனக்கு அப்படிதான் நடந்தது !
Well.. Nice Article about MBA course.
ReplyDeleteBadmapriya studied MBA as everyone, that's all.
What is the motive to bring her name to this article?