மன இறுக்கம் மற்றும் கவலை இல்லாமல் வாழ்வது எப்படி?



எல்லோருக்கும் மன இறுக்கம் (Tension.) உண்டு. எதிர்காலத்தை குறித்த (Apprehension) பயம், கவலை, பதட்டம் போன்றவை இல்லாதவர்களே இல்லை எனலாம். ஒருவருக்கு ஒருவர் அளவுதான் (magnitude) வேறுபடுமே தவிர மன இறுக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. சற்று கூடக்குறைய இருக்கலாம். மன இறுக்கம் என்பதும், மன அழுத்தம் (Depression) என்பதும் இரண்டும் ஒன்றுதான். கவலைகள், பயம் போன்றவை தொடர்ச்சியாக மனதை அழுத்தும்போது மன அழுத்தம் என்றாகிறது.


மன இறுக்கம் அல்லது மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் அதிலிருந்து ஏதாவது ஒருவகையில் விடுபடவே முயற்சி செய்கிறார்கள். கவுன்சிலிங், யோகா, தியானம், ஆங்கில மருந்துகள் இவற்றில் ஏதேனும் ஒன்றில் - அவரவர்களுக்கு தெரிந்தவரை முயல்கிறார்கள். முயற்சியின் அளவிற்கேற்ப ஓரளவு பலனும் கிடைக்கிறது. நவீன நிர்வாக (Management) இயலில் Stress management program என்ற பெயரில் Workshop -கள் நடத்தப்படுகின்றன. கார்பொரேட் கம்பெனிகளில் பணிபுரியும் ஊழியர்கள் (Employees.) - வேலைப்பளு (Workload) மற்றும் குடும்ப பிரச்சினைகள் (Family conflicts) இவற்றின் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை வரை சென்று விடுவதால் கம்பெனி நிர்வாகம் இதில் ஒரு தனிகவனம் (of serious concern) செலுத்துகின்றன. மனரீதியான பிரச்சினைகளால் அல்சர், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடற்பருமன் (Obesity) போன்ற உடற்கோளாறுகள் (Psychosomatic disorders) உருவாகக்கூடும் என்பது படித்த அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. நீடித்த மன உளைச்சலால் உடலில் ஸ்டீராய்டுகள் தூண்டப்பட்டு கான்செர் (Cancer) கூட ஒருவருக்கு உருவாகலாம் என்கிறன நவீன ஆராய்சிகள். யோகா, தியானம், உடற்பயிற்சிகள் எல்லாம் ஓரளவு உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் Stress management program -கள் முழுமையான பயந்தருகின்றனவா என்று கேட்டால் , இல்லை எனபதே பதிலாகும்.


ஏனெனில், மன அழுத்ததிலிருந்தும் - கவலை,பயம் போன்றவற்றிலிருந்தும் விடுபட மனித வாழ்க்கையை பற்றிய ஒரு முழுமையான அறிவு (A Complete or Holistic knowledge about life) தேவைப்படுகிறது. மனித வாழ்க்கை ஒரு கோளத்தை (globe) போன்றது. அதன் ஒருபகுதியை மட்டும் உற்று நோக்கினால் , அந்த அளவிற்கேற்பவே நமக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் நமக்கு வேண்டியதோ நிலைத்த நீடித்த அமைதி அல்லவா? Stress management program -களில் உள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால், அதையும் .Power point presentation slide.-களை போட்டு பாடம், படிப்பு (Academic) மாதிரியே நடத்துவதே ஆகும். நடைமுறை வாழ்க்கையை ஒட்டி கற்று தராததும், வாழ்க்கை அனுபவங்களிலிருந்து ஒப்பிட்டு கற்று தராததும், ஒரு தத்துவார்த்த பின்புலம் (Philosophical background) இல்லாமல் நடத்துவதுமே Stress management program -களில் உள்ள முக்கிய குறைகளாகும். இக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாழ்க்கையை பற்றிய ஒரு பரந்த , முழுமையான அறிவு தேவைப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை A Comprehensive understanding of life என்று கூறலாம்.


என்னுடைய முப்பது வயதில், எனக்கு விவரம் தெரியாத வருடங்களை கழித்துவிட்டால் மீதியுள்ள வயதில் கிடைத்த அனுபவங்களை கொண்டு ஒரே ஒரு உபதேசத்தை மட்டும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதை உபதேசம் என்று கூறுவதைவிட - ஒரு அமைதியான, சிறப்புமிக்க, மன அழுத்தம்-கவலை-பயம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு , கடமையை செய்து மகிழ்ச்சி காணும் ஒரு திருப்தியான வாழ்க்கைக்கான ஒரு நல்ல வழிகாட்டுதல் (Guidance) என்றே கூறுவேன். வழிகாட்டுவதற்கு இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒருவர் நினைக்கலாம். கவுன்சிலிங் கொடுப்பதை ஒரு தொழிலாக (Professional counselling) செய்ய முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றவன் என்ற முறையிலும், மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற - உளவியல் வல்லுனர்களால் நடத்தப்படும் கவுன்சிலிங் படிப்பை முடித்தவன் என்ற முறையிலும் இக்கட்டுரையை எழுத தகுதி உள்ளவன் என்றே என்னை கருதிகொள்கிறேன்.


எதையும் எதிர்பார்க்காமல் கடமையை செய்தல் - என்பதே அந்த எளிமையான மந்திர வரிகளாகும். இதை சற்று விரிவாக புரிந்துகொள்ள வேண்டும். மனதில் ஒரு எதிர்பார்ப்பு (Expectation) உருவாகும்போது என்ன நடக்கிறது? ஒரு நிகழ்ச்சியானது நாம் நினைத்தவாறே நடக்க வேண்டும் என நினைக்கும்போதே, ஒரு பொருள் நமக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கும்போதே, ஒரு ஆணோ பெண்ணோ நம்மை விட்டு போய்விடுவாரோ என நினைக்கும்போதே (Separation in love) - மனதிலும் , மண்டையிலும், மூளை செல்களிலும் ஒருவித இறுக்கம், அழுத்தம் வந்துவிடுகிறது. அதனை தொடர்ந்து இதயத்துடிப்பு அதிகமாகிறது. உடலில் ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்க ஆரம்பிக்கின்றன. உடலில் ஒவ்வொரு நோயாக நுழைய துவங்குகின்றன. கவலை, பயம், பீதி போன்றவையெல்லாம் மன அழுத்தத்தின் வேற்று வடிவங்களே ஆகும்.


ஒவ்வொருவருக்கும் இயற்கையில் ஒரு செயல்திறமை (Capacity) இருக்கிறது. எதிர்பார்ப்பும், அதனை தொடர்ந்து உண்டாகும் இறுக்கமும் ஒரு மனிதனின் இயற்கையான செயல்திறமையை (It causes inefficiency) பாதிக்கின்றன. எதிர்பார்ப்பானது ஏமாற்றத்தையும் பாதிப்பையுமே உண்டாக்குகின்றன. சரி, எதிர்பார்ப்பதை விட்டுவிட்டால் என்னவாகும் என்று சிந்திப்போம்? இயற்கையில் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரு ஒழுங்கமைப்பின் படியே ( Design of nature) நடக்கின்றன. நாம் பிறக்கிறோம், சிலகாலம் வாழ்கிறோம், பின்பு மரித்து விடுகிறோம். யாருமே வேண்டுமென்று நினைத்து பிறந்ததில்லை. இறப்பும் நம் கையில் இல்லை. நிகழ்கால வாழ்க்கை மட்டுமே நம்கையில் உள்ளது. வாழும்காலத்தில் ஆண்டவனின் கருணையினால் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இன்ப துன்பங்களை மாறி மாறி அனுபவிக்கிறோம். எல்லாமே ஒரு முறைப்படிதான் (Order) நடக்கின்றன. எனவே, ஒருவர் எதிர்பார்த்துதான் ஒன்று நடக்க வேண்டும், ஒரு பொருள் கிடைக்க வேண்டும் என்பதில்லை. எதிர்பார்ப்பை விட்டு விட்டாலும் நமக்கு வேண்டிய நல்ல விஷயங்கள் நடக்கத்தான் போகிறது, கிடைக்கத்தான் போகிறது. இயற்கையின் அமைப்பை யாராலும் தடுக்க முடியாது. எதிர்பாராமல் இருப்பதால் நடக்கவேண்டியது நடக்காமல் போய்விடாது.
எனவே எதிர்பார்ப்பு தேவையில்லாத ஒன்று. இன்னும் சொல்லப்போனால், எதிபார்ப்பின்றி நம் கடமைகளை செய்யும்போதுதான், மனச்சுமையின்றி (Without any mental pressure) சுதந்திரமாக முழுத்திறமையோடு ஒரு காரியத்தை செய்ய முடியும்; நமக்கு பேரும், அங்கீகாரமும் கிடைக்கும். ஒரு வேலையை நல்லபடியாக முடித்த திருப்தியும் (Sense of accomplishment ) கிடைக்கும். அதனை தொடர்ந்து நமக்கு வேண்டிய பொருளோ, நபரோ, நினைத்த நிகழ்ச்சியோ சுலபமாக நடந்தேறும்; கிடைக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்தந்த நேரத்தில் நம் கடமையை உணர்ந்து கடமையிலிருந்து வழுவாமல், மனதை செலுத்தி (with concentration and involvement) முழுக்கவனத்தோடு ஒரு காரியத்தை செய்து முடிக்கவேண்டியதுதான். Living in the present moment என்பார்களே அதுதான்.


எதிர்காலத்தை குறித்து ஒரு உத்தேச திட்டம் (A Tentative plan about the future ) வகுத்து வைத்திருப்பதில் தவறில்லை. அதிலும் உடும்புபிடியாக (Rigid) இல்லாமல், சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்து (Flexible), தேவைப்படும் இடங்களில் சிற்சில மாற்றங்களை செய்துகொண்டு வாழ்வதுதான் கவலையும், சிக்கல்களும் இல்லாது வாழ்வதற்கு வழியாகும்.


இது ஒன்றும் வறட்டு போதனை அல்ல. இதுதான் உண்மையான Psychology ஆகும். .Psychology என்றால் யதார்த்த வாழ்விற்கு பயன்பட வேண்டும் அல்லவா? மேற்கண்ட கருத்துக்களை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு, ஆத்மார்த்தமாக (Subjective understanding) உணர்ந்துகொண்டால்தான் பயனளிக்கும். வருங்காலங்களில் ஒருசிலருக்காவது மன ஆறுதலையும், அமைதியான நல்லதொரு வாழ்க்கைக்கு ஒரு சிறு வழிகாட்டியாகவும் ௦- இந்த கட்டுரையானது அமையும் என்ற நம்பிக்கையுடன் நிறைவு செய்துகொள்கிறேன்.

Comments

  1. The reason behind the backwardness for most of the people in India is lack of expectation. Expectation to realize their potential..Instead of not having expectation we can regulate our thought process and belief system in order to realize our fullest potential to elevate ourselves and our society....That would be the best way to relive ourselves from the so called depression and tension,,,,,

    Jai hind

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள கட்டுரை. எனக்காகவே எழுதப்பட்டது போல் இருகின்றதது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Your feedback gives me satisfaction and happiness. thank u....

      Delete

Post a Comment