
நான் உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல்
----வார்த்தையின்றி வேறில்லை என்றார் ராமலிங்கர்.
நாவை எத்தனைமுறை அசைத்து கேட்டாலும்
----பார்த்தாலும் இறைவன் கண்ணுக்கு புலப்படுவதில்லை.
நானா நீயா என் வார்த்தை ஜாலத்தில் ஈடுபடும்
----தான் எனும் தன்முனைப்பை விட்டுவிட்டு- உள்ளத்தில்
நடனமிடும் எண்ண அலைகளை தியானத்தால் படிப்படியாக
----குறைத்து தானே அதுவாகியுணரும் சாதனையாலன்றி
நான் கடவுளெனும் புதிரான சொல்லின் பொருளறிய
----வேறுவழியே இல்லை. சித்தர்கள் கண்ட உண்மை.
- லிங்கேஸ்வரன்
ஆழ்ந்த கருத்துக்கள்.... highly philosophical!
ReplyDelete