
மேகங்கள் இல்லாத ஒரு பௌர்ணமி வானில் அண்ணாந்து பார்த்தால் பிசிறில்லாத வட்ட நிலவும் , நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களும் சிதறிக் கிடப்பது தெரியும். நாம் நிற்குமிடத்தில் இருந்து அப்படியே பறந்து சென்று நிலவில் நிற்பதாக கற்பனை செய்து கொள்வோம். நிலவில் நின்று கொண்டு மேலேயும், கீழேயும், சுற்றியும் நோக்கினால் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் கண்ணுக்கு புலனாகும். ஒரு புறத்தில் பூமியும், மற்றொரு புறத்தில் நெருப்பு பிழம்பான சூரியனும் தெரியும். இப்போது, நிலவில் இருந்து மேல்நோக்கிய திசையில் பறந்து செல்வதாக கற்பனை செய்து கொண்டால் , எண்ணிலடங்காத நட்சத்திரங்களிடையே பயணம் செய்து கொண்டே போகலாம். இந்த நட்சத்திர கூட்டங்களிடையே என்ன இருக்கிறது என்றால் , வெளிதான் (ஸ்பேஸ்) இருக்கிறது.
மேலே காணப்படும் படமானது நமது சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கிரகங்களின் அசலான , செயற்கை கோளிலிருந்து எடுக்கப்பட்ட படமாகும். அதில் காணப்படும் கோள்கள் துல்லியமான வட்டவடிவிலும், இடையில் காணப்படும் வெளியானது தெள்ளத்தேளிவான தூய பளிங்கு போன்றும், கும்மிருட்டாகவும் கண்ணுக்கு தெரிகிறது. இந்த வெளியை தற்போது ஆராய்ச்சியாளர்கள் டார்க் மேட்டர், டார்க் எனர்ஜி என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். நெடுங்காலமாக ஒன்றுமில்லாத சூன்யம், வெற்றிடம், வேக்குவம் என்று கருதப்பட்டு வந்த வெளியானது இப்போது கரும்பொருள், கருப்பு ஆற்றல் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் , வெளியில் மிக மிக நுண்ணிய அதிர்வுகளும், சலனங்களும் தென்படுவதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள். ஆனால் இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், எவ்வளவு உயர்நுட்ப கருவிகளுக்கும், பரிசொதனி முறைகளுக்கும் - வெளியில் காணப்படும் சலன அதிர்வுகள் பிடிபடவில்லை.
ஆஸ்திரியா நாட்டில் வியன்னா நகரில் ஒரு சோதனை கூடத்தில், பூமிக்கடியில் இருபத்தேழு கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு ட்டன்னல் அமைத்து, அதற்குள் படுபயங்கரமான வேகத்தில் சிலபல எலெக்ட்ரான்களை ஒன்றோடொன்று மோத விட்டு , அந்நிகழ்வில் வெளிப்படும் அதிர்வு அல்லது அலைவீச்சில்- வெளியைப் பற்றி ஏதேனும் துப்பு கிடைக்குமா என விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். பலகோடி ரூபாய் செலவில் நூற்றுக்கக்கான பலநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உள்ளனர். வெளியில் புலப்படும் சலன அதிர்வுகளுக்கு காரணமாக ஒருவகையான, வினோதமான, மிக நுட்பமான துகள்கள் இருக்கலாமோ என விஞ்ஞானிகள் ஒரு யூகமாக கணிக்கிறார்கள். அந்த துகள்களுக்கு காட் பார்டிகில் என பெயரும் சூட்டியுள்ளார்கள். காட் பார்டிகில் என்பதை தமிழில் மொழி பெயர்த்தால் இறை துகள் என்று வருகிறது. ஆராய்ச்சியின் முடிவில் ஸ்பேஸ் அதன் ரகசிய முடிச்சுகள் அவிழும் என நம்பப்படுகிறது. அப்துல் கலாம் அவர்கள் சிலநாட்களுக்கு முன்பு, இது ஒரு உருப்படியான ஆராய்ச்சிதான் என்றும், இந்த ஆராய்ச்சி இறுதியில் பிரபஞ்ச தோற்றம் மற்றும் உயிரினங்களின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த சில அதிமுக்கிய கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
சிலநூறு வருடங்களுக்கு முன்பு , வெளியில் ஈதர் எனப்படும் ஒருவகையான துகள்கள் சஞ்சரிக்கின்றன என்றும், அவையே வெளிச்ச அலைகளை கடத்தும் ஊடகமாக செயல்படுகின்றன என்று ஒரு கொள்கை நிலவியது. பின் அது போதுமான ஆதாரமில்லாததால் நிராகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் மிக ஆச்சரியம் , தற்போது அதே இடத்தில் விஞ்ஞானிகள் வந்து நிற்கிறார்கள் எனபதுதான்.
விண்வெளி பல ரகசியங்களை மறைத்து வைத்துள்ளது!!
ReplyDeleteUseful blog you have posted..
ReplyDeleteThere
More more secrets are hided in space mystery.
ReplyDeleteThat will be exposed soonly..
Nice Dicover,
Nice Blog
Nice Man.
How the space have been created.
ReplyDeleteHow could be come? That's a great mystery.