வாழ்வு உண்மையா...?




நாம் கனவு கண்டுகொண்டிருக்கும் பொழுது, கனவானது நமக்கு உண்மை போலவே தெரிகிறது. விழித்தவுடன் தான் அது உண்மையல்ல வெறும் கனவு என்று நமக்கு புலப்படுகிறது. அதே போன்றே, புலன்களை இயக்கி, அதன் வழியே இன்ப-துன்ப அனுபவங்களை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும்போது வாழ்வு ஒரு கனவு; அது நிலையற்றது; மாயை என உணர முடிவதில்லை. மனமானது தியானத்தில் ஆழ்ந்து, ஆன்ம விழிப்புணர்வு பெற்று பிரபஞ்ச உணர்வுடன் லயமாகும்போதுதான் வாழ்க்கை ஒரு கனவு எனத் தெளிவாக உணர்ந்து கொள்கிறது.


- சுவாமி பரமஹம்ச யோகானந்தர்.

Comments

Post a Comment