புலன் கடந்த அனுபவம்... ஈ.எஸ்.பி.


ஈ.எஸ்.பி. என்பது அனேக பேரால் விரும்பி படிக்கப்படும் ஒரு தலைப்பாகும். ஒரு புதிரான, சுவாரசியமான, இன்னமும் முழுமையாக நிரூபிக்கபடாத, அறிவியல் ஏற்றுக்கொள்ளாத இயல் இது. ஈ.எஸ்.பி. என்றால் எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன். தமிழில் புலன் கடந்த அனுபவம் என மொழிபெயர்க்கலாம். பிடிவாதமான தமிழ் ஆர்வலர்களுக்கு புலன் கடந்த கண்ணோட்டம். மறைந்த தமிழ் எழுத்தாளர் பி.சி. கணேசன் என்பவர் இது பற்றிய சில நல்ல புத்தகங்களை எழுதியுள்ளார். ஈ.எஸ்.பி.யானது ஆன்மீகத்திலும் சேராமல், சைக்காலஜியிலும் சேராமல் கடைசியில் நம்ப முடியாத கேஸ்கள் சேர்க்கப்படும் பாரா - சைக்காலஜியில் சேர்க்கப்பட்டுள்ளது.

உண்மையில் ஈ.எஸ்.பி. என்பது மிக எளிமையான ஒன்றேயாகும். நமது உடம்பில் ஐந்து புலன்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல். இவற்றின் மூலம்
பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவை மற்றும் ஸ்பரிச உணர்வுகளை உணர்கிறோம். பொதுவாக நாம் ஒரு ஒரு புலனை இயக்குகிறோம்; உணர்வை பெறுகிறோம். அல்லது ஒரே நேரத்தில் ஓரிரு புலன்களை இயக்குகிறோம்; உணர்வை பெறுகிறோம். இவ்வாறு புலன்களை இயக்கும்போது அல்லது புலனில் தூண்டுதல் (அதாவது வெளிச்சம், சத்தம், வாசனை, தொடல், சுவை) பெறும்போதும் - அவ்வாறு இயக்குவதற்கு தக்கவாறு, அந்தந்த உணர்வுகளுக்கு தக்கவாறு மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. எண்ணங்கள் அனுபவங்களாக பதிவாகின்றன. இதுவே ' புலன் அனுபவம் '.
அதாவது ஆங்கிலத்தில் சென்சரி பெர்செப்ஷன்.

மேற்கண்டவாறு அல்லாமல், புலன்கள் இயக்காமலோ-புலன்கள் தூண்டல் இல்லாமலோ நேரடியாக மனதில் எண்ணங்கள் தோன்றுவதே 'புலன் கடந்த அனுபவமாகும்'. ஆங்கிலத்தில் ஈ.எஸ்.பி. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. அது என்னவெனில், ஏற்கனவே நமக்குள் அனுபவங்களாக பதிந்த கற்பனையான ஆசைகள், அல்ப ஆசைகள் போன்றவையும் தானாகவே எழுச்சி பெற்று (உடல் இயக்கம் தொடர்ந்து நடைபெறுவதால்) மனதில் எண்ணங்களாக தோன்றும். அவைகளை புலன் கடந்த அனுபவம் என நினைத்துவிட கூடாது. நுட்பமாக, நடுநிலைமையோடு கவனித்தால்தான் எது ஈ.எஸ்.பி., எது அல்ப ஆசை என புரியும்.

ஈ.எஸ்.பி. ஆற்றலை எப்படி பெறுவது அல்லது வளர்த்து கொள்வது என்பது
பற்றி ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் உலா வருகின்றன. அவற்றையெல்லாம் யாரும் நம்பிவிட வேண்டாம். ஈ.எஸ்.பி. என்பது பயிற்சி செய்து பெற வேண்டிய கலையோ, ஆற்றலோ அல்ல...









Comments

  1. Nanparae thavarai thiruththi kollavum.... :)
    Arivu eppadi anaiththu maanudarkalukkum pothuvanatho pulan kadantha arivum anaivarukkum pothuvaanathu palarukku intha vidayaththil payirchi aliththa anupavaththil kuurunkindraen..nandri

    ReplyDelete
  2. payirchi seithal esp kaikooduman endru naan nambukiran....meditation seithal mudiyuma ..ungal mobile number enaaku vendum

    ReplyDelete

Post a Comment