
தசாவதாரம் படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் முடியப்போகும் நிலையில் நான் இக்கட்டுரையை எழுதினாலும், இது விமர்சனக்கட்டுரை அல்ல. ஏற்கனவே யோசித்து வைத்ததை இப்போது எழுதுகிறேன்.
தசாவதாரம் படம் பார்த்தவுடன் சிலர் சொதப்பல் கதை என்றார்கள்; சிலர் ஆஹா அற்புதம் என்றார்கள்; சிலர் சர்க்கசுக்கு சென்று வந்ததுபோல் இருந்தது என்றார்கள்; தற்போது பிரபலமாக இருக்கும் எழுத்தாளர் ஒருவர் தசாவதாரத்தை குப்பை என்றார். எனக்கு முதல்முறை பார்த்தபோது தலை வலித்தது. இரண்டாவது தடவை பார்த்த பின் தெளிவாக விளங்கியது. மூன்றாவது தடவை பார்த்தபின் மிகத்தெளிவாக விளங்கியது.
தசாவதாரத்தை படம் என்று சொல்லுவதை விட, கமல்ஹாசன் தன் மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த கேள்விகளை - ஓர் அற்புதமான திரைக்கதையாக்கி நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் என்று சொல்லுவதே சரி. சிந்தனை செறிந்த அக்கேள்விகளுக்கான விடைதேடும் வேலையை கமல் பார்வையாளர்களிடமே விட்டுவிடுகிறார். புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, அக்கேள்விகளை நாலைந்து கேள்விகளாக பிரித்து கீழே தருகிறேன்.
கேள்வி ஒன்று: கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? இருக்கிறார் என்றால், ஆபத்து சமயத்தில் கூப்பிட்ட குரலுக்கு அவர் ஏன் வரமாட்டேன்கிறார்? கூப்பிட்ட குரலுக்கு மனிதர்கள்தானே ஓடி வருகிறார்கள்.
அப்படியென்றால், மனிதன்தான் கடவுளா?
கேள்வி இரண்டு: கடவுள் என்று ஒருவர் இல்லை....எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்திதான் இருக்கிறது என்றால் அந்த சக்தி எங்கே இருக்கிறது?
எப்படி செயல்படுகிறது? ஒன்றும் தென்படவில்லையே? இப்போதும் மனிதர்கள்தானே செயல்படுகிறார்கள். அப்படியென்றால், மனிதசக்திதான் அந்த சக்தியா?
கேள்வி மூன்று: ஒரு மனிதன் செய்யும் காரியம் சிறிது காலத்திற்கு பின் ஒரு விளைவாக வருகிறது. இதேபோல் கோடி மனிதர்கள், கோடி காரியங்கள், கோடி விளைவுகள். ஏராளமான மனிதர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த ' காரியங்கள்-காலம்-விளைவுகள் ' என்ற சங்கிலித்தொடர் ஒரு கோர்வையாக, பின்னிபினைந்து, ஒன்றுக்குள் ஒன்றாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த சிக்கலான சம்பவக் கோர்வைகளில் கூட ஒரு ஒழுங்கமைப்பு தெரிகிறதே? ( கமல் இதை படத்தில் கேயாஸ் தியரி என்கிறார்.)
இந்த ஒழுங்கமைப்பை நிர்வகிப்பது யார்?
கேள்வி நான்கு: எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளோ / சக்தியோ / ஒழுங்கமைப்போ - எதுவானாலும், ஒருபுறம் மனிதர்கள் செத்து சுண்ணாம்பு ஆகிக்கொண்டும் - இன்னொருபுறம் நன்றாக வாழ்ந்து கொண்டுந்தான் இருக்கிறார்கள். இதற்கு யார் காரணம், யார் பொறுப்பு?
கேள்வி ஐந்து: இல்லை, எல்லா சம்பவங்களும் தற்செயலாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவா?
இவ்வாறு தீவிரமான் சிந்தனையை தூண்டும் கேள்விகளை தன் படத்தின் மூலம் பார்வையாளர்கள் முன் வைக்கிறார் கமல்ஹாசன். தசாவதாரம் படத்தின் மூலம் கமல் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பது தெரிகிறது. மேற்கூறப்பட்டுள்ள கேள்விகளையும், கேள்விக்கான பதில்களையும் ஓரளவு யோசித்து விட்டு படம் பார்த்தால்- கமல்ஹாசன் தசாவதாரத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதும், படத்தில் அவருடைய அசாத்திய உழைப்பும், பத்து கதாபாத்திரங்களைக் கொண்டு கமல் திரைக்கதையை கோர்த்த விதமும், கதையின் ஊடாக வசனங்களில் வரும் ரசிக்கத்தக்க ஹாஸ்ய உணர்வும் - தெளிவாக விளங்கும்.
தசாவதாரம் படம் ஆஸ்கார் விருதுக்கே தகுதியானதுதான். ஆனால் கொடுக்க மாட்டார்கள். தெய்வ, அதெய்வ நம்பிக்கைகளை பாரபட்சமில்லாமல், ஒருசேர அலசி ஆராயும் இப்படத்தை நமது தேசிய விருது கமிட்டியே புரிந்துகொள்வது கடினம். பின்பு எப்படி ஆஸ்கார் கமிட்டி புரிந்து கொள்ளும்? எனவே நம்முடைய உலக நாயகனுக்கு, ரசிகர்களின் ஆஸ்காரே போதும்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை போன்ற ஒருசில குறைகள் இருந்தாலும், கமல்ஹாசனின் தசாவதாரம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்று துணிந்து சொல்லலாம்.
visit onlinepj.com you will clear this questions
ReplyDeleteThanks Mr.akbarsha for visiting and comments ...I already knew answers for these questions...En siriya arivirku ettiya ennangalai eluthugiren..
ReplyDeletethought provoking article. write more.
ReplyDeleteThanks saravana..
ReplyDelete.....கடவுள் இல்லையுண்ணு நான் சொல்லல இருந்தால் நல்லாயிருக்கும்.... எவ்வளவு ஆழமான வரிகள் இதன் முலம் அவரின் சிந்தனைப் பொறுமதி தெரிகிறதல்லவா?
ReplyDelete