ரஜினிகாந்த் தன்னுடைய முத்து படம் முதல் தற்போது நடித்து முடித்திருக்கும் யந்திரன் படம் வரை அவர் தொடர்ச்சியாக நடிக்கும் எந்த படத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் இப்படங்களில் அவர் நடிக்கவே இல்லை. சும்மாதான் வந்து போகிறார்.
அவருடைய 'புவனா ஒரு கேள்விக்குறி , எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, இளமை ஊஞ்சலாடுகிறது, படிக்காதவன், நல்லவனுக்கு நல்லவன் ...' இது போன்ற இன்னும் பலபடங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வெளியான பாட்ஷா படத்தில் தன் தங்கைக்காக மன்றாடும் காட்சியில் அவருடைய பழைய நடிப்பை பார்க்கலாம்.
ஒரு நண்பனாக, கணவனாக, தந்தையாக, ஏழையாக, பணக்காரனாக, சாதாரண மனிதனாக அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் நிற்பவை.
இயல்பான நடிப்பை, தங்குதடையின்றி வெளிப்படுத்தியிருப்பார். நடிப்பு போலவே இருக்காது. அவ்வளவு யதார்த்தமாக இருக்கும்.
நான் இவற்றையெல்லாம் கூற ஒரு முக்கிய காரணம் உண்டு, அது என்னவெனில், நடிகர் ரஜினிகாந்திற்கு இயற்கையாக அமைந்த முக அமைப்பே, உடல் அமைப்பே - இயல்பான, மிகையற்ற நடிப்பை வெளிப்படுத்த ஏற்றவாறு அமைந்துள்ளதே காரணம். இது கடவுள் அவருக்கு தந்த வரப்பிரசாதம் எனலாம்.
இதையுணர்ந்து ரஜினிகாந்த் தன் பாதையை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் -
அமிதாப், மோகன்லால், மம்மூட்டி இந்த வரிசையில் அமிதாப்புக்கு முன்னோ, பின்னோ ஒரு இடத்தை பிடிக்கலாம். ஏன்...இந்தியாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் (!) ஆகிவிடலாம்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறினார், ரஜினிக்கு அமிதாப் பச்சனை மிஞ்சும் திறமையும், தகுதியும் உண்டு என.
அவருடைய 'புவனா ஒரு கேள்விக்குறி , எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, இளமை ஊஞ்சலாடுகிறது, படிக்காதவன், நல்லவனுக்கு நல்லவன் ...' இது போன்ற இன்னும் பலபடங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வெளியான பாட்ஷா படத்தில் தன் தங்கைக்காக மன்றாடும் காட்சியில் அவருடைய பழைய நடிப்பை பார்க்கலாம்.
ஒரு நண்பனாக, கணவனாக, தந்தையாக, ஏழையாக, பணக்காரனாக, சாதாரண மனிதனாக அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் நிற்பவை.
இயல்பான நடிப்பை, தங்குதடையின்றி வெளிப்படுத்தியிருப்பார். நடிப்பு போலவே இருக்காது. அவ்வளவு யதார்த்தமாக இருக்கும்.
நான் இவற்றையெல்லாம் கூற ஒரு முக்கிய காரணம் உண்டு, அது என்னவெனில், நடிகர் ரஜினிகாந்திற்கு இயற்கையாக அமைந்த முக அமைப்பே, உடல் அமைப்பே - இயல்பான, மிகையற்ற நடிப்பை வெளிப்படுத்த ஏற்றவாறு அமைந்துள்ளதே காரணம். இது கடவுள் அவருக்கு தந்த வரப்பிரசாதம் எனலாம்.
இதையுணர்ந்து ரஜினிகாந்த் தன் பாதையை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் -
அமிதாப், மோகன்லால், மம்மூட்டி இந்த வரிசையில் அமிதாப்புக்கு முன்னோ, பின்னோ ஒரு இடத்தை பிடிக்கலாம். ஏன்...இந்தியாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் (!) ஆகிவிடலாம்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறினார், ரஜினிக்கு அமிதாப் பச்சனை மிஞ்சும் திறமையும், தகுதியும் உண்டு என.
தமிழகத்தில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்...பாவம் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் இருக்கிறார், இருந்து விட்டு போகட்டுமே!
ReplyDelete