ஞானிகள் சில குறிப்புகள்.

ஞானிகளில் மூன்று வகை உண்டு. மக்கள் இந்த துறையில் சற்று அப்பாவிகளாக இருப்பதால் இதை எழுதுகிறேன். உஷாராக இருந்து தப்பித்து கொள்ளவும்.

முதல் வகை: இவர்கள் ஞானிகளே அல்லர். சுத்த அயோக்கியர்கள். ஞானிகள் என்ற போர்வையில் திரியும் இவர்கள் குறிவைப்பது பணம், உல்லாசம் மற்றும் பெண்போகம். பெண்கள் இவர்களிடம் மாட்டினால் தொலைந்தார்கள்.
சிறந்த பேச்சாற்றல் உடையவர்கள். வசியப்படுத்தும் பேச்சு பேசுவார்கள்.
இனிக்க இனிக்க பேசுவார்கள்.
உழைக்க மனமில்லாமல், சோம்பேறிகளாய் ஞானி வேடம் போட்டவர்கள் கடைசியில் மானம் அழிந்து வாழ்வு சீரழிபவர்கள்.

இரண்டாம் வகை: இந்த வகையினர் நல்லவர்தாம். ஏதேனும் ஒரு குருவிடமோ அல்லது எதோ ஒரு புத்தகத்தை படித்தோ யோகா-தியான முறைகளை கற்றவர்கள் . இவர்களிடம் என்ன பிரச்சினை எனில் , ஆர்வக் கோளாறால் மணிகணக்கில் தியானம் செய்வார்கள், கடுமையாக பிராயாணம பயிற்சி செய்வார்கள். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அல்லது அரைகுறை குருக்களிடம் கற்பது ஆகியவற்றால் இவ்வாறு நேர்கிறது. ஆனால் விளைவு விபரீதமானது. மூளையில் ஆக்சிஜென் பற்றாக்குறை, கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்தல் , செரடோனின்-டோபமைன் போன்ற வேதியல் சமாச்சாரங்கள் கூடுதல் குறைவு போன்ற நிலைமைகளால் ஒருவித பரவசநிலை பயிற்சியாளருக்கு உண்டாகிறது. ஐயோ...பரிதாபம்! இந்நிலைமையை இவர்கள் பேரின்ப நிலை என கருதிக்கொண்டு தாங்கள் ஞானம் அடைந்து விட்டதாகவும், தங்களை ஞானிகள்-சித்தர்கள் எனவும் தவறாக எண்ணிக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு ஆண்ட்டி-டிப்ரஷன் மாத்திரைகளோ , குறைந்த டோஸில் ஆண்ட்டி-சைக்கொடிக் மாத்திரைகளோ கொடுத்தால் நார்மலான மனிதர்களாக மாறிவிடுவார்கள் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். டாக்டர் . சரவணகுமார் , டாக்டர். ஷாலினி போன்றோர் மேற்கண்ட
பரிதாப ஞானிகள் சிக்கினால், குணப்படுத்தி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மூன்றாம் வகை: இவர்களே நாம் தேடும் உண்மையான ஞானிகள். முறையாக யோகா-தியான பயிற்சியை செய்து, பாவச்செயல்களில் இருந்து விடுபட்டு , உள்ளத்தூய்மை பெற்று , கடமையிலிருந்து வழுவாமல் (முடிந்தால் இல்லறத்திலிருந்து), அறிவில் முழுமை பெற்று ஞானம் அடைந்தவர்கள்.
யோசிக்கவே வேண்டாம் இவர்களை அடையாளம் கண்டு விட்டால். இவர்களே ஞானிகள், சித்தர்கள், குருமார்கள். இவர்களின் பொற்பாதங்களை சரணடைந்து விட வேண்டியதுதான்.


நண்பர்களும், தோழிகளும் இக்கட்டுரையை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Comments

  1. இத்தனை விரிவாய் அலசியிருக்கும் தாங்கள் இதில் எந்த் பிரிவில் இருக்கிறீர்கள் என்பதையும் போட்டிருக்கலாம். :))

    ReplyDelete

Post a Comment