மதுரை மீனாட்சியம்மன் - சுருக்கமாக மீனாட்சி. பல பேருடைய இஷ்ட தெய்வம். நான் திருச்சி என்.ஐ.டி. யில் படித்த போது ஒரு சீனியர் பெண் , அவர் பெயர் மீனாட்சி. மதுரை மீனாட்சியை போலவே லட்சணமாக , அழகாக இருப்பார். ( அவரின் சொந்த ஊர் கூட மதுரைதான் !).
மீனாட்சி என்ற பெயரின் ஆதார சொல்லை நான் ஒருநாள் ஆராய்ந்த போது எனக்கு கிடைத்த விளக்கம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. மீனாட்சி, பிரித்தால் மீன்+ஆட்சி என வருகிறது. அதாவது , நீரில் நீந்தும் மீன் அல்ல. வானில் நீந்தும் மீன். அதாவது கோள், கிரகம். நமது புழக்கத்தில் விண்மீன். திருமந்திரத்தில் ஒரு வரியில் மீன் என்ற சொல் கோள் என்ற பொருளில் வருகிறது. பிரபஞ்சத்தில் உள்ள கோடானகோடி கோள்களையும் - அண்ட சராசரங்களையும், அதில் வாழும் உயிர்களையும் காத்து ஆட்சி செய்பவள் என்ற பொருளில் உருவாக்கி உள்ளார்கள். என்னே! நமது முன்னோர்களின் தமிழ் புலமை.
இதே போக்கில் ஆராய்ந்தால் , விசாலாட்சி என்ற சொல் நீக்கமற நிறைந்து ஆட்சி புரிபவள் என்றும், காமாட்சி என்றால் அகில உலகங்களையும், உயிர்களையும் அன்பினால் ஆள்பவள் எனப்பொருள் வருகிறது. அன்பே சிவம் ,
கடவுள் அன்பே வடிவானவன் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா?
இதே ரீதியில், அம்மன் பெயர்களை எல்லாம் யோசித்து பாருங்கள். சுவாரசியமாக , சிந்தனை விருந்தாக இருக்கும்.
மீனாட்சி என்ற பெயரின் ஆதார சொல்லை நான் ஒருநாள் ஆராய்ந்த போது எனக்கு கிடைத்த விளக்கம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. மீனாட்சி, பிரித்தால் மீன்+ஆட்சி என வருகிறது. அதாவது , நீரில் நீந்தும் மீன் அல்ல. வானில் நீந்தும் மீன். அதாவது கோள், கிரகம். நமது புழக்கத்தில் விண்மீன். திருமந்திரத்தில் ஒரு வரியில் மீன் என்ற சொல் கோள் என்ற பொருளில் வருகிறது. பிரபஞ்சத்தில் உள்ள கோடானகோடி கோள்களையும் - அண்ட சராசரங்களையும், அதில் வாழும் உயிர்களையும் காத்து ஆட்சி செய்பவள் என்ற பொருளில் உருவாக்கி உள்ளார்கள். என்னே! நமது முன்னோர்களின் தமிழ் புலமை.
இதே போக்கில் ஆராய்ந்தால் , விசாலாட்சி என்ற சொல் நீக்கமற நிறைந்து ஆட்சி புரிபவள் என்றும், காமாட்சி என்றால் அகில உலகங்களையும், உயிர்களையும் அன்பினால் ஆள்பவள் எனப்பொருள் வருகிறது. அன்பே சிவம் ,
கடவுள் அன்பே வடிவானவன் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா?
இதே ரீதியில், அம்மன் பெயர்களை எல்லாம் யோசித்து பாருங்கள். சுவாரசியமாக , சிந்தனை விருந்தாக இருக்கும்.
Comments
Post a Comment