குடியிருந்த கோயில்.

குடியிருந்த கோயில் - அடிக்கடி கேள்விப்பட்ட வார்த்தைதான். ஆனால் இதன் பொருளைத்தான் சற்று நிதானித்து சிந்தித்திருக்க மாட்டோம்.

மனிதனாக பிறந்த அனைவரும் பிறக்கும் முன் எங்கு குடியிருந்தோம்?
அன்னையின் வயிற்றில்.

பெற்ற அன்னையை குடியிருந்த கோயில் என்று பெருமையுடனும் ,பாசத்துடனும் , தெய்வத்திற்கு ஒப்பாக வர்ணித்த ஒரே மொழி ,உலகிலேயே தமிழ் மொழியாகத்தான் இருக்கும்.

தமிழ் மொழியின் சிறப்பு இங்குதான் கம்பீரமாக வெளிப்படுகிறது.

Comments